மார்ச் 7 முதல் நேரடி வகுப்பு.. ஜூன் 22 செமஸ்டர்.. பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..

Anna university announces offline classes dates and next semester dates

பிப்ரவரி 1 முதல் 20ம் தேதி வரை அரசு கலைக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே நேரடியாக தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்த முடியாத சூழல் இருந்தாலும் கல்வித்தரத்திற்கு எந்த வித சமரசமும் இல்லாத வகையில் உயர்க்கல்வித்துறை செயல்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

நன்கு படிக்கக் கூடிய மாணவர்களையும் கொரோனா பேட்ஜா எனக் கேட்டு வேலைவாய்ப்பு நிராகரிக்க படுவதாக புகார்கள் எழ கூடிய சூழலில் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த முடிவு செய்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்குப் பின், 2, 3 மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் மார்ச் 7ம் தேதி முதல் ஜூன் 11 வரை நடைபெறும் என்றும், ஜூன் 22ம் தேதி நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வு தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Share this post