புனீத் ராஜ்குமார் குடும்பத்தில் ஏற்பட்ட இன்னொரு சோகம்..
கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் முன்னணி நடிகர் புனீத் ராஜ்குமார். எவரும் எதிர்பாராத நிலையில், கடந்த செப்டம்பர் 29ந் தேதி அன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
அவருடைய மரணம் கன்னட மக்கள் மட்டுமல்லாமது, ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகினர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. .46 வயதில் காலமான புனீத் உடலை பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. புனித் மறைவுக்குப் பிறகு அவரது ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் புனீத் ராஜ்குமார் இறுதியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 17-ந் தேதி அவரது பிறந்தநாளன்று வெளியாக உள்ளது. . சேத்தன் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் புனீத் ராஜ்குமார், சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். பிரியா ஆனந்த், சரத் குமார், ஆதித்யா மேனன், ஷிவராஜ் குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியாகும் தினத்திலிருந்து ஒரு வாரத்துக்கு வேறு எந்த கன்னட படமும் வெளியிடப்படக்கூடாது என கன்னட நடிகர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
அவரது மரண அதிர்ச்சியில் இருந்து புனித் மனைவி அஸ்வினி இன்னும் வெளியே வராத நிலையில், அஸ்வினியின் குடும்பத்தில் மற்றொரு மரணம் நிகழ்ந்தது.
புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியின் தந்தை ரேவநாத் மாரடைப்பால் காலமானார். NHAIயில் இன்ஜினீயராக பணியாற்றிய ரேவநாத் அவர்கள் புனித் மரணத்திற்கு பிறகு மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு நேற்று காலமாகியுள்ளார்.