வர திங்கட்கிழமையும் ஸ்கூல் லீவ் விடலாமே - கோரிக்கை வைக்கும் மாணவர்கள் & ஆசிரியர்கள்
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (18ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (19ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நாளான 22ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதில், பிப்ரவரி 21ம் தேதி (திங்கட்கிழமை) மட்டும் பள்ளி வேலை நாள் என்பதால் அன்றும் ஒன்று சேர்த்து விடுமுறை அளிக்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை அரசு ஏற்கும் பட்சத்தில், பிப்ரவரி 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share this post