கிணற்றின் மேல்தளம் உடைந்து 13 பெண்கள் உயிரிழந்த சோகம்..

13 women spot dead falling inside well due to unstable top in up

உத்திர பிரதேசம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்த நிலையில் விருந்தினர்களில் பெண்கள் சிலர், வீட்டிற்கு பின் இருந்த கிணற்றின் மேல் இரும்பால் அமைக்கப்பட்டிருந்த இடத்தில ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக பாரம் தாங்காமல் கிணற்றின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், மேலே நின்ற பெண்கள் அனைவரும் ஆழமான கிணற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

13 women spot dead falling inside well due to unstable top in up

அப்போது, பெண்கள், சிறுமிகள் என 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனால், படுகாயமடைந்து 13 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this post