காத்து வாக்குல ஒரு காதல் .. கட்டியணைத்து காதலர் தினத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.
தமிழ் சினிமாவில் வெகு காலமாக காதலர்களாக வலம் வருபவர்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன். இவர்கள் எப்போது திருமணம் செய்ய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அவர்களுடைய ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
முதல் முறையாக காதல் இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட வீடியோ மற்றும் போட்டோக்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். விக்னேஷ் சிவனை, நயன்தாரா கட்டிப்பிடித்து, கொத்தாக பூக்களை கொடுத்து வாழ்த்து கூறுகிறார். இந்த வீடியோவை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், ஒவ்வொரு முறையும் அவள் பூக்கொடுக்கும் போது முதல் முறை காதலிப்பதை போல் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
காத்து வாக்குல ஒரு காதல் காத்து வாக்குல ஒரு காதல் என்ற கேப்ஷனுடன் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். அதோடு இருவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.