ஓடும் ரயிலில் இளம்பெண் முன் ஆபாச செயலில் ஈடுபட்ட இளைஞர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா. கடந்த 9ம் தேதி பணிக்கு சென்றுவிட்டு பெண்கள் மட்டுமே பயணிக்கும் பெட்டியில் மின்சார ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் இரு பெண்கள் இருந்தனர்.
மீனம்பாக்கம் ரயில்நிலையத்தில், இளைஞர் ஒருவர் பெண்கள் பெட்டியில் ஏறி அமர்ந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென அந்த நபர் சுயஇன்பத்தில் ஈடுபடத் தொடங்கினார். இதைக் கண்ட பெண்கள் திடுக்கிட்டு போயுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ரேணுகா தனது மொபைல் போனில் அதனை வீடியோ எடுத்து சத்தம் போட ஆரம்பித்தார். இதனால் அந்த நபர் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பின்னர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ரேணுகா பதிவிடவே , தாம்பரம் ரயில்நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து அந்த நபரை தேடி வந்த நிலையில், அந்த இளைஞர், மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (23) என்பதை உறுதி செய்து, கைது செய்தனர்.
அவரும், ரயிலில் பெண்கள் முன் ஆபாசமாக நடந்ததை ஒப்புக் கொண்டதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.