மொத்த அழகும் இப்டி மொத்தமா காட்டிடீங்க... ரசிகர்களை மயக்கிய வாணி போஜன்..
ஊட்டியில் படுகா பேமிலியில் பிறந்து வளர்ந்தவர் வாணி போஜன். முதலில் ஏர் ஹோஸ்டஸ் ஆக வேலை செய்ய தொடங்கிய இவர், English Literature டிகிரி படித்தவர். அதனைத் தொடர்ந்து, சென்னை சில்க்ஸ் விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
2010ம் ஆண்டு முதன் முதலாக ஓர் இரவு என்னும் தமிழ் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியல் தொடரில் நடித்து இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தார்.
இதற்காக பல விருதுகளையும் குவித்தார். சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கப்படும் இவர், பின்னர் தெலுங்கு படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
தமிழில், ஓ மை கடவுளே என்னும் படத்தில் மீரா அக்கா கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர், லாக்அப், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது மஹான் படத்தில் நடித்து அது முழுமையாக காட்சிப்படுத்த முடியாத காரணத்தினால் இவரது காட்சிகள் எடிட் செய்யப்பட்டது.
தற்போது 5திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள இவர், தனது புகைப்படங்களை சோசியல் மீடியா தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.