இது மாதிரி நிறையா போட்டோ போடு செல்லம்.. அசத்தும் க்யூட் போஸில் சரண்யா துரடி !
தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவர் நடிகை சரண்யா துரடி.
கலைஞர் செய்திகள், ராஜ் டிவி, புதிய தலைமுறை போன்ற பிரபல செய்தி சேனல்களில் பணியாற்றியுள்ளார். மேலும், நியூஸ்18 தமிழ் நாடு சேனலில் சீனியர் பதவியில் வேலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதன் முதலாக நெஞ்சம் மறப்பதில்லை என்னும் தொடர் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார்.
அதன் பின்னர், சன் டிவியில் ரன் மற்றும் விஜய் டிவியில் ஆயுத எழுத்து போன்ற சீரியல் தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் ரோஜா என்ற சீரியலிலும் நடித்தார்.
தனது காதலரை திருமணம் செய்த சரண்யா, மீண்டும் சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். மேலும், தனது சோசியல் மீடியா பக்கத்தை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்கும் சரண்யா தற்போது கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார்.