மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக ஹர்பஜன் சிங்கை நியமித்தது ஆம் ஆத்மி கட்சி
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள எம்.பி.க்கள் இடங்களை நிரப்ப வருகிற 31ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏழு மாநிலங்களை எம்.பி.க்கள் தேர்வு செய்யக்கூடிய நிலையில் ஐந்து இடங்கள் காலியாக உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. ஐந்து இடங்களுக்கு வேட்பாளரை நியமித்து ஆம் ஆத்மி கட்சியால் வெற்றி பெற முடியும். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி மாநில எம்.எல்.ஏ ராகவ் சதா ஆகியோரை மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்பாளராக நியமித்துள்ளது.
Share this post