நெல்லையில் பயங்கரம்... பிரபல ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொலை: போலீசாரை தாக்கியதால் தற்காப்புக்காக என்கவுன்ட்டர்..!!

Crime Thieft Dindigul Neeravi Murugan Rowdy Encounter In Tirunelvelu

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நீராவி முருகன் மீது கடத்தல் உள்பட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தூத்துக்குடியில் உள்ள புதியம்பத்தூர் பகுதியில் உள்ள நீராவி என்ற தெருவில் வசித்து வந்ததால், ரவுடி முருகன் நீராவி முருகன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

Crime Thieft Dindigul Neeravi Murugan Rowdy Encounter In Tirunelvelu

ரவுடி நீராவி முருகனை கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்கியதால், தற்காப்புக்காக என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீராவி முருகன் மீது இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

Share this post