'என் வாழ்க்கைய புரட்டி போட்ட நாள் இது.. 2 பேர இழந்தேன்..' அதிர்ச்சியூட்டும் VJ கல்யாணியின் வைரல் பதிவு
குழந்தை நட்சத்திரம் என்றாலே ஞாபகம் வருபவர் கல்யாணி, இவரது இயற்பெயர் பூர்ணிதா.
300ற்கும் அதிமான விளம்பர படங்களில் நடித்த இவர், அள்ளி தந்த வானம் என்னும் பிரபுதேவாவின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிக பேமஸ். இதில் காசு காசு என வரும் பாடல் எவராலும் மறக்க முடியாது.
அதனைத் தொடர்ந்து, ரமணா மற்றும் ஜெயம் படத்தில் முக்கிய வேடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்த கல்யாணி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து, சின்னத்திரைக்கு வந்த கல்யாணி, சாருலதா, அண்ணாமலை, சின்ன பாப்பா பெரிய பாப்பா, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர், கங்கா போன்ற தொடர்களில் முக்கிய ரோல் வகித்தார்.
மேலும், சில பிரபல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றினார். பின்னர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார்.
இந்நிலையில், நடிகை கல்யாணி தனது தாய் மரணம் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் டிவம்பர் 24, 2014ம் ஆண்டு, சாதாரணமாக தொடங்கி எனக்கு மறக்கமுடியாத வாழ்க்கையை மாற்றும் நாளாக மாறிவிட்டது.
எனது தாய் தற்கொலை செய்துகொண்டார். எனது தாய் இறக்கும் போது எனக்கு 23 வயது என ஒரு நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.