"அந்த சீரியல்'ல First Night Scenes சமாளிக்க முடியல.." மறைந்த விஜே சித்ரா சொன்ன ரகசியத்தை உடைத்த சரண்யா..
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் குறித்து அனைவரும் அறிவர். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா. இதற்கான உண்மை காரணம் குறித்து தற்போது வரை எந்த ஒரு தகவலும் இல்லை.
சித்ரா ஹேமந்த் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்திருந்தார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜோடியாக வந்து இருந்த இவர்கள் சந்தோசமான ஜோடியாகவே எல்லாரும் பார்த்தனர். ஆனால், பதிவு திருமணமாகி 3 மாதத்திற்குள்ளேயே கணவருடன் தங்கியிருந்த போது சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர்கள் அதன் பின்னர் பிரம்மாண்டமாக திருமணம் செய்யவிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சித்ராவின் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் அளித்த தகவல் மூலம் தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்து வந்தார் சித்ரா. அந்த கதாபாத்திரத்திற்காக மெனக்கெட்டு நடிப்பது, அழகான புடவைகளை தேர்வு செய்து அணிவது என இருந்து வந்தார்.
சித்ராவின் தற்கொலை குறித்து இன்னும் மர்மம் நீடித்து வரும் நிலையில், அவரது மரணத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் திடுக்கிடும் தகவல் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜே சித்ராவின் தோழியும் நடிகையுமான சரண்யா தற்போது பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு சில பிரச்சனை ஏற்பட்டதாகவும் எந்த நேரத்தில் நான் லவ் பண்றேன் என்று கூறிய நாள் முதல் லவ் காட்சிகள் நெருக்கமான காட்சிகள் எடுப்பதாக சித்ரா என்னிடம் கூறினார்.
இதுகுறித்து, சித்ராவின் அம்மாவும் என்னிடம் கூறியிருக்கிறார்கள். என்னால் சமாளிக்க முடியவில்லை. என் கணவர் இதனால் கோபப்படுகிறார் என்று கூறியதாகவும் அவர் உன்னை புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் சீரியலில் லவ் காட்சிகள் பண்ணமாட்டேன் என்றும் என்னிடம் சித்ரா கூறினார் என தெரிவித்துள்ளார்.
இதனால் விஜே சித்ரா பயந்ததாகவும் அதை மறைத்து சிரித்தபடி இருந்தாள் என்று கூறியுள்ளார். அதற்கு நான் தைரியமாக அதை எல்லாம் டெலீட் செய்யுங்கள் என்று கூறியதோடு அவருடன் பேசிய ஆடியோ காலையும் போட்டுக்காட்டியுள்ளார். அதில் ஒரு வீடியோவை எனக்கு அனுப்பி அழுதால் என்று சரண்யா கூறியுள்ளார்.