ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிய காரணத்தை போட்டுடைத்த அர்ச்சனா.. தீயாய் பரவும் தகவல் !
மாடலிங், விஜே தற்போது சீரியல் நடிகை என அடுத்தடுத்து வெற்றி பாதையை அமைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை மற்றும் VJ வான அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்து வந்தவர். அதனைத் தொடர்ந்து, யூடியூபில் குறும்படங்கள், வெப் சீரீஸ் என இளசுகள் மத்தியில் செம பேமஸ்.
இதன் மூலம், சித்து, ஆலியா மானசா நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2ல் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வந்தார். வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், தனது அழகான தோற்றம், சேலை காட்டும் விதம் என இவரது appearance’க்கு இளம் பெண்கள் வட்டாரத்தில் இவர் பாப்புலர்.
மேலும் முரட்டு சிங்கிள் சீசன் 2, காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் தோன்றி வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அர்ச்சனா, மாடர்ன் உடைகள், ரீல்ஸ் வீடியோ என நாளுக்கு நாள் பாலோயர்ஸ்களை குவித்து வருகிறார். இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவவ்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடர் கதாநாயகன் அருண் பிரசாத்திற்கும் இவருக்கும் காதல் விரைவில் கல்யாணம் என பல தகவல்கள் உலா வந்தன.
ராஜா ராணி சீசன் 2 தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா, 2வது பிரசவத்திற்காக சீரியல் இருந்து விடுபெற்றார். அதன் பின்னர், ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா அந்தகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில், ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வந்த நடிகை அர்ச்சனா சீரியலில் இருந்து விலகவே, ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் நடித்த அர்ச்சனா குமார், அர்ச்சனாவுக்கு பதில் நடித்து வருகிறார். இந்த நிகழ்வு அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது.
ஆனால், தொடரில் இருந்து அவர் விலகியதற்கு உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், ராஜா ராணி 2 தொடரில் 3 ஆண்டுகளுக்கு மேல் நடித்துவிட்டேன், எனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்து இதில் இருந்து விலகினேன்.
நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உண்மையா, இல்லையா என்பது வரும் நாட்களில் தெரியும், பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார். இதனால், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவிருக்கிறார் என வதந்திகள் உலா வரத் தொடங்கியுள்ளது.