விக்னேஷ் சிவன் - நயன் திருமணம் பற்றி வருத்தத்துடன் பேட்டியளித்த விக்கியின் நெருங்கிய உறவினர் !
நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்தார். 2015ம் ஆண்டு முதல் காதலில் இருக்கும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் உலா வருகிறது. இந்நிலையில், விக்னேஷ் சிவனின் உறவினர் பேட்டி ஒன்றில் இதனைக் குறித்து பேசியுள்ளார்.
திருச்சி மாவட்டம், லால்குடி வடக்குதெருவை சேர்ந்த சிவக்கொழுந்து - மீனாகுமாரி தம்பதியின் மகன்தான் விக்னேஷ் சிவன். சினிமாவுக்காக தனது இயற்பெயரான விக்னேஸ்வரன் என்ற பெயரை விக்னேஷ் சிவன் என மாற்றிக் கொண்டிருக்கிறார். சிவக்கொழுந்து தற்போது இல்லை. தாய் மீனாகுமாரி விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகிறார்.
விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் என்பவருக்கு குழந்தை இல்லை என்பதால் விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் தங்களுடைய சொந்த குழந்தை போல வளர்த்து வந்தனர். ஆனால் பணி காரணமாக விக்னேஷ் சிவனின் தாய் தந்தை கடந்த 1970களிலேயே சென்னை வந்துவிட்டனர்.
அதன்பின்பு விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கும் தங்களது குடும்பத்துக்கும் பெரிதாக தொடர்பு இல்லை என கூறியுள்ள விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம், விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யா திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்யப் போகும் நிலையில் இதுவரை எங்களுக்கு எந்தவித அழைப்பு விடுக்கவில்லை என்பது மன உளைச்சலாக இருப்பதாக மாணிக்கம் வருத்தத்துடன் கூறியுள்ளார். இருப்பினும் விக்னேஷ் சிவன் எங்களது மகன் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.