'இப்படி தான் ஆக போகுது.. தாலி கட்டிய நேரம் சரியில்லை' விக்னேஷ் சிவனின் பெரியப்பா பேட்டி
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார்.
கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார்.
இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் இன்று ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாபலிபுரத்தரில் நடக்கும் திருமணத்திற்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திரையுலக பிரபலங்களை அழைத்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜூன் 11ம் தேதி மதியம் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி உள்ளது.
இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா அணிந்திருந்த உடை அதற்கான காரணம் மற்றும் திருமண செட் அப் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா பொருத்தம் சூப்பர் என ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். இதையடுத்து, நாளை பத்திரிகையாளர் சந்திப்பில் நயன் விக்கி கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் பெரியப்பா பெரியம்மா உள்ளிட்டோரை திருமணத்திற்கு அழைக்காதது குறித்து அவர்கள் வருத்தத்துடன் பேட்டியளித்துள்ளனர். இந்த வீடியோ செம வைரல் ஆகி வருகிறது. நயனின் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்ட இந்த திருமணத்தில் விக்னேஷ் சிவனின் அம்மாவை தவிர மற்ற உறவினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து எந்த ஒரு தகவலையும் சொல்லவில்லை என்று விக்னேஷ் சிவனின் பெரியப்பா பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து அவரின் பெரியப்பா கூறுகையில் ‘கல்யாண முகூர்த்த நேரம் 8 இருந்து 9 வரை என சொன்னார்கள். 9 இருந்து 10 மணி வரை வேற எந்த சுபநிகழ்ச்சிகளை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இவன் தாலி கட்டுயது 10.25 சரியான குளிகை நேரம் இந்த நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்தினாலும் அது மீண்டும் ரிப்பீட் ஆகும்’ என கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவன் தங்களை திருமணத்திற்கு அழைக்கவில்லை என விக்னேஷ் சிவனை தூக்கி வளர்த்த அவரின் பெரியம்மா தன் ஆதங்கத்தை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ‘நான் அவனுடைய பெரியம்மா அவனுக்கு இன்று திருமணம் என்று சொன்னார்கள் எப்படி இருந்தாலும் என்னை அவர் கூப்பிடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவன் வரவே இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. கல்யாணத்துக்கு பிறகு இரண்டு பேரும் விருந்திற்கு வந்தால் சந்தோஷப்படுவேன். அதுவும் நடக்குமா இல்லையா என்று தெரியவில்லை.
எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று நினைக்கிறேன். அவன் எங்களை நினைத்து இருக்க மாட்டானா, ஏன் எங்களை அழைக்கவில்லை என்று எங்களால் சொல்ல முடியவில்லை. பெரியவர்கள் தான் பெரியம்மா பெரியப்பா மதிக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் என்ன சொன்னார்களோ தெரியவில்லை. அவன் வரவே இல்லை. நான்தான் அவனை அழைத்து சென்று குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைக்கலாம் என்று சொன்னேன். ஆனால் தனியாகவே வந்து பொங்கல் வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்’ என உருக்கமுடன் கூறியுள்ளார்.