குலதெய்வ கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த நயன் - விக்கி.. வைரலாகும் வீடியோ & போட்டோஸ் !
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார்.
கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
சினிமா கெரியர் சக்சஸ்புல்லாக அமைந்த இவருக்கு, பர்சனல் வாழ்க்கையில் நிறைய சங்கடங்கள், தோல்விகள் இதனால் வந்த அவப்பெயர்கள் என ஏராளம்.
அத்தனையும் சகித்து வந்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கிய இவர், கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார்.
இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
கடந்தாண்டு உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
நானும் ரவுடி தான் போல ஒரு வெற்றி படத்தை தந்த பிறகு திருமணம் என விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.
தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடிக்கடி கோவில்களுக்கு விசிட் அடித்து வரும் இவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் ஜூன் 9ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து அவர்கள் பக்கம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. நயன்தாரா, விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் வழிபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நயன்தாரா பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
கும்பகோணம் அருகே உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலில் பொங்கலிட்டு வழிபட்ட நயன்தாரா#Nayanthara | #VigneshShivan pic.twitter.com/IzrHp6T9hE
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 23, 2022
விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட நயன்தாரா..#Nayanthara #vigneshshivan #kaathuvaakularendukadhal pic.twitter.com/h6002ZRsrY
— Asianetnews Tamil (@AsianetNewsTM) May 23, 2022