நெற்றியில் குங்குமம்.. கல்யாணம் முடிஞ்சுடுச்சா..? குழப்பத்தை ஏற்படுத்தும் நயன் போட்டோஸ் !
சந்திரமுகி படத்தில் சாதாரண துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.
தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் இவர், நம்பர் ஒன் நடிகையாக மாறியுள்ளார். வல்லவன், ஐயா, பில்லா போன்ற படங்களில் சாதாரண நடிகையாக வலம் வந்த இவர், தற்போது நடிகை முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
அறம், டோரா, இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் தன் வசம் ரசிகர்களை கட்டிப் போட்டார். போடா போடி படத்தில் அறிமுக இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வரும் இவர், விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, அதிகமாக கோவில் தரிசனம் செய்து வரும் கேரளாவில் சோட்டாணிக்கரை அம்மன் கோவில், சென்னை பாரிமுனையில் இருக்கும் காளிகாம்பாள் கோவில் உள்ளிட்டவற்றிக்கு சென்ற போட்டோஸ் வைரல் ஆனது. தற்போது மைலாப்பூர் கோவில் சென்ற இவர்களது புகைப்படம் செம வைரல் ஆகி வருகிறது.
இவர் திருமணம் ஆன பின் பெண்கள் வைப்பது போல நெற்றியில் குங்குமம் வைத்திருப்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.