சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: கணவர் நிரபராதி எனத் தீர்ப்பு..!
விஜய் டிவியில் பல வருடங்களாக மிகவும் வெற்றிகரமாக ஓடிய தொடர் பாண்டியன் ஸ்டோர். இந்த தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து நடித்து அழகான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகை சித்ரா.
இவர் இந்த தொடருக்கு முன் நிறைய சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தாலும், சித்ராவிற்கு பெயர் வாங்கிக் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரம் தான்.
தொடர்ந்து நடித்து வந்த இவர். தன்னை மிகவும் போல்டான பெண்ணாக தான் காட்டி வந்தார். ஆனால், படப்பிடிப்பை முடித்து ஹோட்டல் அறைக்கு சென்றவர். திடீரென தற்கொலை செய்து கொண்டார். சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேமுநாத் குற்றவாளியாக கருதப்பட்டார்.
தற்போது சித்ரா மரண வழக்கிலிருந்து ஹேம்நாத் விடுவிக்கப்பட்டுள்ளார். உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி திருவள்ளுவர் மகளிர் நீதிமன்றம் விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.