அற்புதம்மாள் வாழ்க்கையை பயோபிக்காக எடுக்கவிருக்கும் வெற்றிமாறன்.. வைரலாகும் வீடியோ !
தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் நடிகை வெற்றிமாறன். தனது ஒவ்வொரு படத்திலும் மிக கவனம் செலுத்தி இவர் எடுப்பதை பார்த்து நிறைய சினிமா தொழில் நுட்ப துறையினரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
இவர் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றி படமாக அமைந்து, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து, ஆடுகளம் மற்றும் வடசென்னை போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது.
முதல் படம் முதலே வெற்றி தர தொடங்கிய இந்த கூட்டணி, பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை மெகா ஹிட் திரைப்படங்களை தந்து வருகிறது. இதனால் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணையும் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வடசென்னை பாகம் 2 உருவாகி வரும் நிலையில், அதன் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பல திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு தந்துள்ளார். தற்போது, விடுதலை, சூர்யா வைத்து வாடிவாசல் போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். சில வெப் சீரீஸ்களையும் தந்துள்ளார்.
இந்நிலையில், இவர் எடுக்க ஆசைப்படும் ஒரு வெப் சீரீஸ் பற்றி கூறியுள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு இன்று பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.
அவரது அம்மா அற்புதம்மாளின் இத்தனை வருட போராட்டத்தையும், வாழ்க்கையையும் திரைப்படமாக எடுக்க விரும்புவதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.