'2 நாளா நொறுங்கிபோய்ட்டேன்.. ஆனா இதுக்கு மேல வேற என்ன வேணும்..' எமோஷனல் ஆன வெங்கடேஷ் பட்.. வைரலாகும் பதிவு !
சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.
2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி.
இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட்.
முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
மூன்றாவது சீசனில் வித்யுல்லேகா ராமன்,ரோஷ்னி ஹரிப்ரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.
அடுத்தடுத்து எலிமினேஷன், காமெடி என கலவையாக இருந்து வரும் இந்நிகழ்ச்சியில், நடுவர் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் பேசிய வீடியோ தற்போது செம பேச்சு பொருளாக மாறி உள்ளது. இந்த நிகழ்ச்சி ஊரடங்கு சமயத்தில் நிறைய பேருக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக அமைந்தது என்பது உண்மை.
அந்த வகையில், குழந்தை இல்லாமல் ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலாக சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து வந்த ஒரு தம்பதி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்தால் ஸ்ட்ரெஸ் குறைந்து குழந்தை பிறந்துள்ளதாக ஒரு பெண் சொன்னதாக கூறியிருந்தார் செஃப் வெங்டேஷ் பட்.
அதனை தற்போது நெட்டிசன்கள் வைரல் செய்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பத் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில், இவர் கூறிய விஷயம் இணையத்தில் பெரும் கேலியாக மாறி இவரை நெட்டிசன்கள் வளைத்து கலாய்த்து வருகின்றனர். இதற்கு ரசிகர் ஒருவர், தங்கள் வாழ்க்கையில் நிஜமாக நடந்த சம்பவம் குறித்து பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த வெங்கடேஷ் கூறியதாவது, ‘ கடந்த இரண்டு தினங்களாக நான் மிகவும் வருத்தத்துடன் உடைந்து போய் இருக்கிறேன். என்னை கேலி செய்தார்கள் என்பதற்காக அல்ல. ஆனால், ஒரு சில மீம்களை பார்க்கும்போது ஆனால், செத்துவிட்டது என்று எண்ணம் வரவைத்து விட்டது. எது வேண்டுமானாலும் இறக்கலாம் ஆனால் மனிதன் இருக்காது.
ஆனால், கடவுள் இருக்கிறார் குமாரு சந்திரமுகி படம் மாதிரி இரண்டு நாள் அண்ணன்ங்க ஆட்டம் இருந்தது. குழந்தை செல்வம் உள்ளவர்களுக்கே தெரியும், எவ்வளவு பெரிய பாக்கியம் உள்ளவர்களுக்கே அப்படி என்றால் இல்லாதவர்களை யோசித்துப் பாருங்கள். எனக்காக அல்ல உயிரை சுமக்கும் பெண்ணுக்காக கேட்டுக் கொள்கிறேன்.
தயவு செய்து என்னை கிண்டல் செய்வதாக எண்ணி உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் எனக்கும் மணமுடித்து ஏழு ஆண்டுகள் கழித்து கிடைத்த செல்வம் என் குழந்தை ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் ஆனதை நான் உணர்ந்தேன்’ என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
Before you troll and laugh study abt ivf. People who r taking te treatment need to be stress free n hpy.
— DKN (@DineshK_N) May 28, 2022
This show giving them that, this ia what chef was saying.#CookWithComali3 #CookWithComali pic.twitter.com/h0bsW1mFCK