'என்னை காயப்படுத்திய.. ஏமாற்றிய பாவிகளை மன்னித்துவிட்டேன்' வனிதா யாரை சொன்னாங்க தெரியுமா?
பிரபல திரையுலக நட்சத்திரங்கள் விஜய குமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார்.
இவரது சகோதரிகள் பிரபல நடிகைகள் ப்ரீதா, ஸ்ரீ தேவி, சகோதரர் நடிகர் அருண் விஜய்.
2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் அவர்களை திருமணம் செய்தார் வனிதா. இவர்களுக்கு ஸ்ரீ ஹரி என்னும் மகனும், ஜோவிகா என்னும் மகளும் உள்ளனர்.
ஆகாஷ் மற்றும் வனிதா கருத்து வேறுபாடு காரணமாக பிரியவே, ஸ்ரீ ஹரி தாத்தா விஜய குமார் மற்றும் தனது ஆகாஷ் அவர்களுடன் சென்றுவிட்டார்.
பின்னர், வனிதா 2வதாக ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
2012ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டனர். 2 மகள்களுடன் தனியே வசித்து வந்த வனிதாவுக்கு எந்த வித ஆதரவும் இல்லாமல் தனியே வாழ்ந்து வந்தார்.
பின்னர், 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா. ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
1995ம் ஆண்டு சந்திரலேகா என்னும் படத்தில் விஜய் ஜோடியாக வனிதா நடித்தார். அதனைத் தொடர்ந்து, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் போன்ற தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
பின்னர், சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் எழவே, திரைத்துறையில் இருந்து விலகி இருந்த வனிதா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி மிக பிரபலம் அடைந்தார்.
தற்போது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல் தொடர்கள் என பங்கேற்று வரும் வனிதா, தனி யூடியூப் சேனல், துணி கடை, மேக் அப் ஆர்ட்டிஸ்ட் என பல அவதாரம் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ, எஸ்தல் என்டர்டெய்னர் நிறுவனம் சார்பில் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார். மருத்துவராக ‘நீயா நானா’ கோபிநாத், அனிகா, சீதா, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டர் இணையத்தில் செம வைரல் ஆனது.
இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண்விஜய் நடித்த யானை திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் படமாக அமைந்து பேமிலி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. யானை படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை வனிதா, கடினமான உழைப்பும்,விடா முயற்சியும் நிச்சயம் தோற்காது என வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, யானை படம் வெற்றிபெற்றதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த அருண் விஜய்யிடம் செய்தியாளர் ஒருவர், படத்தில் உறவுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என பேசி இருக்கீர்கள் , உங்கள் குடும்பத்திலும் ஒருவரை ஒதுக்கி வைத்துள்ளீர்களே அவர்களை சேர்த்துக் கொள்வீர்களா என கேட்டுள்ளார். இதற்கு அவர் பதில் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக சென்ற வீடியோ செம வைரல் ஆனது .
இந்நிலையில், வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், மதிப்புமிக்க பொருட்கள், சொத்துக்களை எதிர்பார்க்காத குழந்தைகள் எனக்கு இருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமானவர்கள் பல லட்சியங்களை வைத்து இருக்கிறார்கள். அவர்களும் என்னைப் போல் தலை நிமிர்ந்து உழைத்து சாதிப்பார்கள்.
மேலும், ‘இணையத்தில் சில செய்திகள் பரவி வருவதைப் பார்த்து, நான் என் வலியையும் துயரத்தையும் விட்டுவிட்டு ஒரு சிறந்த மனிதனாக மாறிவிட்டேன். வாழ்க்கையில் பாவம் செய்த, என்னை காயப்படுத்திய, அவமானப்படுத்திய , என்னை ஏமாற்றிய பாவிகளை நான் மன்னித்துவிட்டேன். எனக்கு எந்த வெறுப்பும் இல்லை, யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லை. மறப்போம் மன்னிப்போம்’ என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவை பல ரசிகர்கள் எதற்கு எடுத்தாலும் சண்டைப்போடும் வனிதாவா இது என கேட்டுள்ளார்.