காங்கிரஸ் மூலம் அரசியல் எண்ட்ரி..? உண்மையை பளீச் என கூறிய திரிஷா
பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார். லேசா லேசா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், எனக்கு 20 உனக்கு 18, மௌனம் பேசியதே, சாமி உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். மேலும், 90ஸ்களில் கனவு கன்னியாக இருந்தவர்.
விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பு பயணத்தில் பெரிய மைல்கல்களாக மாறியது. விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.
39 வயது ஆன போதிலும், இன்னும் அதே அழகுடன் மக்கள் மனங்களை கவர்ந்து வருகிறார். நடிகை திரிஷா கர்ஜணை, சதுரங்க வேட்டை 2, ராம், ராங்கி, தி ரோட், பிருந்தா போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தனது அழகால் கவர்ந்தார்.
இந்நிலையில், விரைவில் நடிகை திரிஷா அரசியலில் நுழைய திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வந்தது. அதுவும் தேசிய கட்சியான காங்கிரஸில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது. அரசியலில் எண்ட்ரி கொடுத்தால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா அல்லது சினிமாவிற்கு டா டா காட்டிவிடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில், தற்போது, நடிகை திரிஷாவே இது குறித்து விளக்கமளித்து இருக்கிறார். அதன்படி “கொஞ்சமும் உண்மையில்லாத தகவல் இது, எப்படி இப்படி ஒரு செய்தி பரவியது என்று எனக்கே தெரியல. எனக்கு அரசியலில் சேரும் எண்ணம் துளியுமில்லை. அதேபோல் எப்போது திருமணம் என்கிற கேள்வியை என்னிடம் யாரும் கேட்கக்கூடாது என்பதை நான் விரும்புகிறேன்” என கூறி இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திரிஷா.