விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீட்டு வாசலில் விஜய் செய்துள்ள விஷயம் !
பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ்.
எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது.
மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66. இப்படத்திற்கு வாரிசு என பெயரிட்டுள்ளனர். இதன் 3 போஸ்டர்கள் விஜயின் பிறந்த நாளன்று வெளியானது.
இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அளவுக்கு விஜய் உயர்வதற்கு முக்கிய காரணமாக அவருடைய உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அவருடைய தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரும் முக்கிய காரணம். ஆரம்ப காலத்தில் விஜய் தட்டுத்தடுமாறி நடித்து, சுமார் 10 படங்களுக்கு பிறகுதான் தளபதி விஜய் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் வகுத்தார்.
நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியான சமயத்தில், மதம் சார்ந்த பல சர்ச்சைகளும், விமர்சனங்களுக்கும் தனிப்பட்ட முறையில் விஜய் மேல் கூறப்பட்டது. அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன் பீஸ்ட் படத்திற்காக அவர் கொடுத்திருந்த பேட்டியில், இயேசு, பிள்ளையார், ஹல்லா என மூவரையும் நான் வணங்குவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது வீட்டின் வாசலில் பிள்ளையார், அம்மன் சிலையை வைத்துள்ளார் நடிகர் விஜய். இதை பார்த்த விஜய்யின் ரசிகர்கள் பலரும், இந்த புகைப்படத்தை பதிவு செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.