Thalaivar169 Update: டைட்டிலுடன் வெளியான தலைவர்169 படத்தின் முக்கிய தகவல்.. இதுவும் ஒரு Fan-Boy சம்பவம் தான் போல !
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘தலைவர்169’. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
தொடர் வெற்றி படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் தலைவர்169 இவர் இயக்கமாட்டார் என தகவல் பரவி வந்த நிலையில், ரஜினி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர்169 பட போஸ்டரை பதிவிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், முக்கியமான ரோலில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க போவதாகவும் கூறப்பட்டது. தலைவர் 169 படம் இந்த ஆண்டு தீபாளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷுட்டிங்கே ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் தகவலாக, தலைவர்169 படத்தில் ரஜினிக்கு வில்லனாக கன்னட மெகா ஸ்டார் சிவ ராஜ்குமார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பதாக அப்டேட்கள் வெளியானது.
இதுவரை பாலிவுட், டோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகர்களை தமிழ் படங்களில் வில்லனாக நடிக்க வைத்து வந்தனர். கேஜிஎஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, கன்னட திரையுலகின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தற்போது படத்தின் டைட்டில் மற்றும் கதைக்களம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தலைவர்169 படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதை எனவும், இப்படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.