Real & Reel - சிம்ரன் பகிர்ந்த புகைப்படத்தால் ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள் !
ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இதனைத் தொடர்ந்து, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கிய நிலையில், ஒன்ஸ் மோர் மற்றும் விஐபி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் பேவரைட் ஆக மாறினார்.
பின்னர், நேருக்கு நேர், நட்புக்காக, அவள் வருவாளா என பல திரைப்படங்களில் அதிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், கமல் ஹாசன், அர்ஜுன், பிரபு தேவா என டாப் ஹீரோக்களுடன் நடித்து நிறைய வெற்றி படங்களை தந்துள்ளார்.
இவரது ஸ்லிம் உடல்வாகு, அழகான முகத்தோற்றம் காரணமாக பல வருடங்களாக டாப் வரிசையில் கொண்டாடப்பட்டவர். தெலுங்கு மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இடுப்பழகி சிம்ரன் என சொல்லும் அளவிற்கு மிடுக்கான ஸ்லிம் இடுப்புக்கு பெயர் போனவர்.
தற்போது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது நடுவராகவும் ஸ்பெஷல் கெஸ்ட் ஆகவும் வரும் சிம்ரன், துப்பறிவாளன், சீமராஜா, பேட்ட உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகை சிம்ரன் தற்போது அந்தகன், கேப்டன், துருவநட்சத்திரம், வணங்காமுடி ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, ராக்கெட்ரி படத்தில் மாதவன் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து எடுத்துள்ள படம் தான் ராக்கெட்ரி.
நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ’ராக்கெட்டெரி’ படத்தில் நடித்தது தனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் மாதவனுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி என்று சிம்ரன் பதிவு செய்திருந்தார்.
தற்போது விஞ்ஞானி நம்பி நாராயணனின் குடும்ப புகைப்படத்தை பதிவு செய்து, ’ராக்கெட்டெரி’ படத்தின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, ‘ரியல் மற்றும் ரீல்’ என்ற கேப்ஷனை குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானி நம்பி நாராயணனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் இருக்கும் இந்த புகைப்படம் சிம்ரன் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.