Viral Video: அண்ணாத்த & எதற்கும் துணிந்தவன் பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்.. பரபரப்பு புகார்..
சென்னையை அடுத்த மாங்காடு அருகே கெருங்கம்பாக்கம், பாலகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள துணை நடிகை ரஞ்சனா.
இவர் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளார். மேலும், சின்னத்திரையில் ‘பேரன்பு’ போன்ற சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகி, இவர்களுக்கு பெண் குழந்தை ஒருவரும் உள்ளார்.
இந்நிலையில், இவர் மாங்காடு காவல் நிலையத்தில் தன்னுடைய மாமனார் மற்றும் மாமியார் குறித்து பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் இது குறித்து துணை நடிகையின் மாமனார் - மாமியாரிடம் விசாரிக்க சென்றபோது அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகிறார்கள்.
துணை நடிகை செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது - ‘நான் ஒரு நடிகையாக இருப்பதால் தன்னுடைய மாமனார் சரவணவேல் மற்றும் மாமியார் சாந்தி ஆகியோர் தன்னை மதிப்பதில்லை என்றும், பலமுறை நீ ஒரு நடிகை தானே என கேட்டு மாமனார் உடல் ரீதியாக தன்னிடம் அத்துமீற முயன்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல் பலமுறை இது குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தபோதும் மாமியாரின் நெருங்கிய உறவினர் காவல் துறையில் மிக உயரிய பதவியில் இருப்பதால் தன்னுடைய புகார் மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு கூட தன்னுடைய மாமனார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் அவரை தடுத்த காரணத்தால், பெரிய மரக்கட்டையை கொண்டு தன் மீது கொலவெறி தாக்குதல் நடத்தியதாகவும் இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தான் சிகிச்சை பெற்றதாகவும் கூறியுள்ளார்.