'சிம்பு தான் டார்ச்சர் பண்றாரு..' Whatsapp ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய ஸ்ரீநிதி !
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த 7C சீரியல் தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீநிதி. இதனைத் தொடர்ந்து, பகல் நிலவு, வள்ளி போன்ற சீரியல் தொடர்களில் நடித்து வந்தார்.
தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி என்னும் பிரபல தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் பிரபலமாக நடித்து வரும் ஸ்ரீநிதி, பிரபல சின்னத்திரை நட்சத்திரங்களுடன் புகைப்படங்கள் எடுப்பது வெளியே செல்வது மேலும் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து சாதாரணமாக இவர் கூறிய கருத்து அவரை பெரும் அளவில் திருப்பி பாதித்து விட்டது.
அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களிலும், மெசேஜ் மூலமாகவும் மோசமாக கமெண்ட் செய்தும் பேசி அவரை மனஉளைச்சலுக்கு ஆளாகியதாக, அவர் சந்தித்த இன்னல்கள், மனப்போராட்டங்கள் குறித்து வீடியோ பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சிம்புவை திருமணம் செய்ய ரெடி என ஸ்ரீநிதி இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் ‘ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள். நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்’ போல என குறிப்பிடப்பட்டு மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அதில் நீங்கள் இருவரும் திருணம் செய்து கொள்ளலாமே என கேள்வி எழுப்புவது போல கமெண்ட் இருந்தது.
அதற்கு ஸ்ரீநிதி ‘இருவரும் திருமணம் செய்து கொண்டால் நல்லாத்தான் இருக்கும். ஆனால், எனக்கு தற்போது ஆள் இருக்கே’ என தெரிவித்துள்ளார்.
தற்போது அவரின் இந்த ஸ்டேட்டஸ் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஸ்ரீநிதி - எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் என்பதை என்னால நம்பவே முடியல.
இன்னைக்கு தான் புரிஞ்சது சிம்பு, எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்! லேட்டா தான் புரிஞ்சது ஆனா புரிஞ்சிடுச்சு.
சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என பதிவிட்டுள்ளார்.
ப்ளீஸ் வாங்க. வந்து சேர்த்து வைங்க, கத்துரதுக்கு எனர்ஜி இல்ல. எனக்கு அவ்ளோ ஒர்த்துனு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல, புரிய வச்சிட்டாரு! வேணும், பாக்கனும், இப்பவே” என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீநிதியின் இந்த பதிவை தொடர்ந்து பல செய்திகள் இணையத்தில் உலா வந்தது. இதனை கண்டு அவரின் தந்தை ஸ்ரீநிதிக்கு மெசேஜ் செய்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீநிதி ‘நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா.
சிம்பு தான் என்ன லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன டார்ச்சர் பண்றாரு, நான் பொய் சொல்ல மாட்டேன் தானே’ என பதில் கூறியுள்ளார்.
மேலும், இந்த ஸ்கீரின் ஷாட்டை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீநிதி, ‘என்னிடம் சிம்பு குறித்து கேட்பதற்கு பதிலாக ஏன் நீங்கள் அனைவரும் என்னை பற்றி அவரிடம் கேட்கமாட்றீங்க.
நான் பொய் சொல்லவில்லை. சமூக வலைதளத்தில் நான் உண்மையாக இருக்கிறேன். அவரை பற்றி எந்த பேட்டியையையும் நான் கொடுக்க மாட்டேன். அவரே கொடுக்கட்டும். அவரை கேளுங்கள்’ என பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரீநிதி.
இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அவர் நிஜமாகவே சிம்புவை லவ் பண்றாரா இல்ல பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறாரா என்பது தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர். இந்த விஷயம் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.
இதற்கு சிம்பு ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். எங்க தலைவன் இப்போ தான் சர்ச்சை எதுவும் இல்லாம, நிம்மதியா இருக்காரு. அது உங்களுக்கு பிடிக்கலையா ? பேமஸ் ஆக எவ்வளவோ வழி இருக்கு. ஒருத்தரை டேமேஜ் பண்ணி தான் பேமஸ் ஆகணுமா? என கண்டமேனிக்கு வறுத்தெடுத்து வருகின்றனர்.