'என்னைய வீட்டுல வெச்சு பூட்டிட்டாங்க.. என்னைய பாத்து பயப்படுறாங்க.. செத்துரவா ?' ஸ்ரீநிதியின் அதிர்ச்சி பதிவு !
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த 7C சீரியல் தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீநிதி. இதனைத் தொடர்ந்து, பகல் நிலவு, வள்ளி போன்ற சீரியல் தொடர்களில் நடித்து வந்தார். இறுதியாக, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி என்னும் பிரபல தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
சின்னத்திரையில் பிரபலமாக நடித்து வந்த ஸ்ரீநிதி, பிரபல சின்னத்திரை நட்சத்திரங்களுடன் புகைப்படங்கள் எடுப்பது வெளியே செல்வது மேலும் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து சாதாரணமாக இவர் கூறிய கருத்து அவரை பெரும் அளவில் பாதித்து விட்டது.
அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களிலும், மெசேஜ் மூலமாகவும் மோசமாக கமெண்ட் செய்தும் பேசி அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியதாக, அவர் சந்தித்த இன்னல்கள், மனப்போராட்டங்கள் குறித்து வீடியோ பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சிம்புவை திருமணம் செய்ய ரெடி. எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் சிம்பு. எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்! சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என சிம்பு வீட்டு வாசலில் இருந்து ஸ்டேட்டஸ் பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பி வந்தார்.
தனது தந்தையிடம் ‘நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா. சிம்பு தான் என்ன லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன டார்ச்சர் பண்றாரு’ என அவர்கள் செய்த உரையாடலை பதிவிட்டிருந்தார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அவர் நிஜமாகவே சிம்புவை லவ் பண்றாரா இல்ல பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறாரா என்பது தெரியாமல் குழம்பிப்போய் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நடிகை ஸ்ரீநிதி இன்ஸ்டா லைவ் வீடியோவில் அவரது தோழி மற்றும் நடிகையான நக்ஷத்திரா தவறான ஒருவருடன் திருமண பந்தத்தில் இணையவிருக்கிறார் என்றும், விஜே சித்து தவறான ரிலேஷன்ஷிப்பை தேர்வு செய்ததால் அவருக்கு நடந்தது நக்ஷத்திராவுக்கும் நடக்கலாம். நான் இப்போதே இதை சொல்வது அதனால் தான்.
நக்ஷத்திராவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அவர் இறந்தால் கூட அவரது சாவுக்கு நான் செல்லமாட்டேன் என கூறி ஸ்ரீநிதி பகீர் கிளப்பி வந்தார். இவரது இந்த பதிவுகளுக்கு விளக்கமளித்த நக்ஷத்திரா, ஸ்ரீநிதி depressionல இருக்க நாள இப்டி பேசுறா என கூறியிருந்தார். மேலும், ஸ்ரீநிதியின் தாயாரும் இதுகுறித்து நிறைய பேட்டி கொடுத்திருந்தார்.
பிரபல ஆன்லைன் சேனலுக்கு பேட்டியளித்த ஸ்ரீநிதி, ஒரு சேனல் ஹெட் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாகவும். தாம் அதிலிருந்து தப்பிவிட்டதாக கூறி பகீர் கிளப்பி இருந்தார். பின்னர், சிம்பு பற்றி நிறைய பேசி இருந்தார். இதையடுத்து, அவரது அம்மா அளித்த பேட்டியில், ஸ்ரீநிதி டிப்ரஷனில் இருப்பதால் இப்படியெல்லாம் பேசுவதாகவும், அவரை யாரும் திட்ட வேண்டாமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
பின்னர், ஸ்ரீநிதி சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. விரைவில் அவர் மீண்டும் வீடு திரும்புவார் என நெருங்கிய நண்பர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென ஸ்ரீநிதி மருத்துவமனையில் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்டுவிட்டதாகவும், மன அழுத்தத்திற்கான சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என பல விதமாக தகவல் வெளியே வந்தது.
இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை நக்ஷத்திரா, இவர் ஸ்ரீநிதியின் நெருங்கிய தோழி. நக்ஷத்திராவின் திருமண புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியிருந்தார். தற்போது, மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டு வலிமை சுமாரான படம் தான் என கூறி இருக்கிறார் ஸ்ரீநிதி.
‘வலிமை படத்தை பற்றி ஏன் விமர்சித்தேன் என்றால் அது ஒரு படம், அதை விமர்சனம் செய்ய யாருக்கு வேண்டுமானாலும் உரிமை இருக்கிறது. இப்போவும் கேட்டால் ‘வலிமை சுமாரான படம்’ என்று தான் சொல்வேன். அது எனக்கு பிடித்த படம் இல்லை என்றாலும் இந்த சமுதாயத்திற்கு தேவையான ஒரு படம் தான்” என ஸ்ரீநிதி குறிப்பிட்டுள்ளார்.
இப்போது எதற்காக வலிமை பற்றி மீண்டும் பேசுறீங்க என நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன அவர், ‘என்னை வீட்டில் வைத்து பூட்டிவிட்டார்கள். தனிமையில் இருக்கிறேன். என்ன செய்ய. என் நெருங்கிய நண்பர்களே என்னை பார்த்து பயப்படுகிறார்கள். எங்கே போவது. சாகவா’ என கேட்டிருக்கிறார்.