#14YearsOfSubramaniyapuram.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த சசிக்குமார் !
2008ம் ஆண்டு சசிகுமார், ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிப்பில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் சுப்ரமணியபுரம். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, சுந்தரபாண்டியன், குட்டி புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, கொடிவீரன், வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத்தேவா, பேட்ட, நாடோடிகள் என பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஈசன் திரைப்படத்தை இயக்கினார். தற்போது, நானா, Common Man போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவு செய்ததை தொடர்ந்து, அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
படத்தின் காட்சி அமைப்புகள், திரைக்கதை உள்ளிட்டவை மிரட்டலாக அமைந்திருந்தன. இந்தப் படமே கேங்ஸ் ஆப் வாசேப்பூர் படத்தை எடுக்க தனக்கு உந்துதலாக இருந்தது என பிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் படத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
அந்த அளவில் படத்தில், காதல், நட்பு, துரோகம் என அனைத்துமே சிறப்பாக காணப்பட்டது. கேங்ஸ்டர் படங்களில் ஒரு ட்ரெண்ட் செட்டராகவும் அமைந்தது. இந்நிலையில், இயக்குநர் சசிக்குமார், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக ட்வீட் செய்திருக்கிறார்.
ஜூலை 4 எப்போதுமே தனக்கு ஸ்பெஷல். அன்றைய தினம் சுப்ரமணியபுரம் வெளியானதுதான் அதற்கு காரணம். மேலும் இந்த படத்திற்கு தற்போது வரை ரசிகர்களின் ஆதரவிற்கும் நன்றி என கூறியுள்ளார்.
இத்துடன் விரைவில் ரசிகர்கள் கண்டிப்பாக தனது அடுத்த இயக்குநர் அவதாரம் எடுப்பது குறித்த செய்தியை கேட்பீர்கள் என அவர் கூறியுள்ளார். மேலும் சுப்ரமணியபுரம் படத்தின் போஸ்டர்களையும் இந்தப் பதிவில் அவர் பகிர்ந்துள்ளார்.
July 4 will always spl to me #Subramaniyapuram was released on this day 14 years ago. It just feels like yesterday. I’m humbled by the way people revere it, until today. Very soon you will hear the news about my Nxt venture, of course, as a filmmaker #14YearsOfSubramaniyapuram pic.twitter.com/irCmUIysgE
— M.Sasikumar (@SasikumarDir) July 4, 2022