சமந்தா செல்ல பிராணிகள் பற்றி பதிவிடுவதை குறித்து பேசிய நெட்டிசன்.. நோஸ்-கட் செய்த சமந்தா !
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர்.
தமிழ் மொழியில் தெறி, மெர்சல், 24 போன்ற திரைப்படங்களில் விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் ஆட்டம் போட்டது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனது.
தற்போது, இவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதீஜா கதாபாத்திரம் செம வைரல் ஆகி வரவேற்பு பெற்று வந்தது. தற்போது, விஜய் தேவரகொண்டா ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சமந்தா, தனது புகைப்படங்கள் மற்றும் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பதிவிடுவதும், ரசிகர்களுடன் உரையாடுவதும் என இருந்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்த சமந்தா, அதனை இவ்ளோ நாள் மிஸ் பண்ணியதாக பதிவிட்டு இருந்தார்.
அவரின் இந்த பதிவிற்கு, நெட்டிசன் ஒருவர், ‘கடைசி வரைக்கும் நாய்கள் மற்றும் பூனைகளுடன் கிடந்து சாகப்போகிறார்’ என பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்த சமந்தா, அப்படி நடந்தால் நான் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுவேன் என பதிவிட்டிருந்தார்.
சமந்தாவின் இந்த பதிலை பார்த்து, அந்த டுவிட்டை டெலிட் செய்துவிட்டார் அந்த நெட்டிசன்.