Viral Video: ரசிகர்களால் சூழ்ந்து நெரிசலில் சிக்கி பயந்து போன நடிகை சாய் பல்லவி.. வைரலாகும் வீடியோ..

sai pallavi got inbetween crowd after a public function video viral

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் சாய் பல்லவி. மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

sai pallavi got inbetween crowd after a public function video viral

தெலுங்கில் பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, ஷ்யாம் சிங்க ராய் போன்ற படங்களிலும், தமிழில் தியா, மாரி 2, NGK போன்ற திரைப்படங்களிலும், மலையாள மொழியில் ப்ரேமம், காளி, அதிரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னரே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

sai pallavi got inbetween crowd after a public function video viral

தென்னிந்திய திரையுலகத்தில் முன்னணி நடிகைகள் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும் சாய் பல்லவி, சமீபத்தில், விராடபர்வம், கார்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும், விமர்சனம் ரீதியாக பல்வேறு பாராட்டுக்களை குவித்தது. சாய் பல்லவியின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

sai pallavi got inbetween crowd after a public function video viral

தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் வருகிறார். இந்நிலையில், இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சாய் பல்லவி நிகழ்ச்சி முடித்துவிட்டு காரில் ஏறும்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அங்குள்ள ரசிகர்கள் கொடுத்த பரிசுகளை வாங்கி மற்றும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது கூட்டம் அதிகரித்ததால் சாய் பல்லவி பயந்து அஞ்சியுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Share this post