கணவர் இறந்து ஒரு வாரமே ஆன நிலையில்.. மீனா பற்றி வெளியான வதந்தி.. ச்ச எப்டி இப்டி சொல்ல மனச வருது ?
1982ம் ஆண்டு சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90ஸ்களில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்து ரஜினி, கமல், கார்த்தி என டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் 90ஸ்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை மீனா.
அதன் பின்னர், பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் நடிகை மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர், குடும்பம் குழந்தை என ஆன பிறகு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தற்போது, இவரது மகள் நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்நிலையில், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நுரையீரல் செயல்படாமல் எக்மோ சிகிச்சையில் இருந்துள்ளார். வித்யாசாகர், பின்னர் எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், 28.06.2022 இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் மீனாவுக்கு ஆறுதல் கூறி அவர் கணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். நடிகர் ரஜினிகாந்த், ரம்பா, ஸ்னேஹா, இயக்குனர் ரவி குமார், சுந்தர் சி, மன்சூர் அலிகான், கலா மாஸ்டர், நடிகை லட்சுமி, இயக்குனர் சேரன், நடிகை ரம்பா என பலரும் மீனா வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, மீனா தனது கணவரின் மறைவு குறித்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என வேண்டுகோள் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். மீனா விரைவில் இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். இப்படி இருக்க தற்போது மீனா பற்றி சமூக வலைதளத்தில் சில வதந்திகள் பரவி வருகிறது.
மீனாவின் கணவர் இறந்து ஒரு வாரமே ஆகி உள்ள நிலையில், மீனா மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து விட்டதாக கூறி, இவருடைய விளம்பர படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிலர் சமூக வலைதளத்தில் பரப்பினர். ஆனால் இது உண்மையில், இரண்டு மாதத்திற்கு முன்னர் எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இதனை மீனாவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மீனா எவ்வித வதந்திகளையும் பரப்பாதீர்கள் என, சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டு தெரிவித்த போதிலும் சிலர் இப்படி நடந்து கொள்வது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.