நம்பி நாராயணனாக மாதவன்.. 'ராக்கெட்டரி' படத்தின் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த ராஜ மரியாதை ! பிரதமர் மோடி Viral Tweet !
ஒரு காலத்தில் பேவரைட் க்ரஷ், சாக்லேட் பாயாக இருந்தவர் நடிகர் மாதவன். தற்போது அவ்வளவு திரைப்படங்களில் நடிக்காத மாதவன், முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘ராக்கெட்டாரி’.
இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து எடுத்துள்ள படம் தான் இது.
நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
முதன் முதலாக இந்த ஆண்டு முதல் Country of Honour எனும் ஒரு கெளரவத்தை கான்ஸ் திரைப்பட விழா நடத்தும் அமைப்பு கொண்டு வந்திருக்கிறது. அதாவது, கான்ஸ் திரைப்பட விழாவில் ‘Country of Honour’ என ஒரு தேசத்தை சிறப்பிக்கும் முயற்சியை இந்த ஆண்டு முதல் தொடங்குகிறது.
அதில், முதல் நாடாக இந்தியா அந்த அங்கீகாரத்தை பெற தேர்வாகி உள்ளது. இந்த விழாவில் பல வர்த்தக ரீதியான விஷயங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன.
கான்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ராக்கெட்டரி திரைப்படத்தை இந்திய அரசு சார்பில் World Premiere ஆக ரிலீஸ் செய்ய உள்ளனர். தற்போது இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
கடந்த சம்மருக்கே வெளியாகவிருந்த ராக்கெட்டரி திரைப்படம், கொரோனா காரணமாக தள்ளிப் போன நிலையில், கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பாராட்டி உள்ளார்.
வரும் ஜூலை 1ம் தேதி இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் சார்பில் உலகமெங்கும் ரசிகர்களுக்காக ராக்கெட்டரி திரைப்படம் தியேட்டரில் வெளியாக போகிறது.
Thank you so very much sir. We cannot agree more.The entire team and I will put in our best efforts to make sure that happens. Thank you so much again. 🙏🙏🇮🇳🇮🇳 https://t.co/1qT0XeOtWw
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 5, 2021