'தளபதி விஜய்க்காக அப்பாகிட்ட சண்டை போட்டேன்' தளபதி66 Fan - Girl Moment குறித்து பேசிய ராஷ்மிகா!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங்காக விஜய் ஹைதராபாத் செல்லும் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வைரல் ஆனது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழு வெளியிட்டது.
அந்த அறிவிப்பில், இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் செட் அமைத்து பாடல் ஷூட்டிங் செய்தனர்.
இந்நிலையில், ஹைதராபாத் சென்றுள்ள தளபதி விஜய், மரியாதை நிமிர்த்தமாக தெலுங்கானா முதலமைச்சர் சந்தரசேகர் ராவ் அவர்களை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், விடியோக்களும் வைரலாக பரவி வந்தன.
தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாடல் சென்னையில் அரபிக் குத்து பாடல் படமாக்கப்பட்ட அதே செட்டில் ஷூட் செய்யப்பட்டது.
இதையடுத்து 2ம் கட்டமாக ஐதராபத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு மாத படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், சூட்டிங் முடிந்து விஜய் சென்னை திரும்பியுள்ள புகைப்படம் வைரலாகி வந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது என விஜய் மற்றும் வம்சி இருக்கும் புகைப்படத்துடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வருகிற ஜூன் 2ஆம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக விஜய் லுக் வைரலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து ராஷ்மிகா பிலிம்பேர் இதழுக்கு பேட்டியில் பேசியுள்ளார். படத்தில் தனக்கு மிகவும் வலிமையான கேரக்டர் என்று அவர் கூறியுள்ளார். தனக்கும் தன்னை சேர்ந்த தன்னுடைய குடும்பத்தினருக்காகவும் எப்போதும் துணை நிற்கும் கேரக்டரில் தான் நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யுடன் ஜோடி சேர்ந்தது குறித்து ராஷ்மிகா மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். தனது கனவு நனவான தருணம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.
எப்போதுமே தான் விஜய்யின் ரசிகையாக இருப்பதாகவும், தற்போது அவருடன் இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாகவும், சமீபத்தில் தன்னுடைய நெருங்கிய தோழியின் திருமணத்தில் இது குறித்து பேசி மகிழ்ந்ததாகவும் ராஷ்மிகா மேலும் கூறியுள்ளார்.