குட்டியா கியூட்டா இருக்கே.. குழந்தை பெயரை அறிவித்த ரன்பீர் கபூர் - ஆலியா பட்.. இவ்ளோ அர்த்தமா?
பாலிவுட் நடிகையான ஆலியா பட், பிரபல பிலிம்மேக்கர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸுடன் அவர்களின் மகள் ஆவார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
Sangharsh மற்றும் Student of the Year உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, 2 States , Humpty Sharma Ki Dulhania , Badrinath Ki Dulhania , Dear Zindagi போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியது.
திரைப்படங்கள் மட்டுமல்லாது நிறைய விளம்பர படங்களிலும் மியூசிக் ஆல்பம்களிலும் நடித்துள்ளார். முதன் முதலாக, தெலுங்கில் பிரம்மாண்ட திரைப்படமான RRR திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது, 4 திரைப்படங்கள் கை வசம் வைத்து ஆலியா, தனது போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
2018ம் ஆண்டு முதல் காதலில் இருந்து வந்த ரன்பிர் - ஆலியா ஜோடி, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதல் திருமணம் செய்து கொண்டனர். தங்களது வீட்டிலேயே திருமணம் ஏற்பாடு செய்து உறவினர்கள் சில நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்துகொண்டார்கள்.
பின்னர், நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவமனை புகைப்படத்துடன் வெளியிட்டார். மேலும், அலியா பட் தனது baby bump உடன் இருக்கும் நிறைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
கடந்த நவம்பர் 6ம் தேதி இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பலரும் இந்த செய்தியை அறிந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், ஏப்ரல் மாதம் 11ம் தேதி 2022ல் ரன்பிர் - ஆலியா திருமணம் நடைபெற்ற நிலையில், நவம்பர் 6ம் தேதியான நேற்று இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கிட்டத்தட்ட 7மாத இடைவெளியில் இது எப்படி சாத்தியம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் தனது குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள பெயரை முதன்முறையாக அறிவித்துள்ளார் ஆலியா பட். அதன்படி அவருக்கு ராஹா என பெயரிடப்பட்டு உள்ளதாக ஆலியா தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பெயரை அவரது மாமியாரும், தனது கணவர் ரன்பீர் கபூரும் தேர்வு செய்ததாக தெரிவித்துள்ளார். ரன்பீர் கபூரின் குடும்ப வழக்கப்படி ஆர் என்கிற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் தான் வைக்கப்படும். தற்போது அதே நடைமுறையை அவர்கள் பின்பற்றி உள்ளனர்.