'அப்போ மூக்குத்தி அம்மன் படத்துல தங்கச்சி கேரக்டர்.. LKG படத்துல அந்த பாட்டு..' RJ பாலாஜியை விளாசும் ரஜினி ரசிகர்கள்!
RJ, காமெடியன், இயக்குனர், கிரிக்கெட் கமெண்டேட்டர், நடிகர், தொகுப்பாளர் போன்ற பல அவதாரத்தில் திரையுலகில் வலம் வருபவர் RJ பாலாஜி. 92.7 பிக் FM என்னும் ரேடியோ சேனலில் பணியாற்றியதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.
அதனைத் தொடர்ந்து, நைட் ஷோ வித் RJ பாலாஜி, டேக் இட் ஈஸி, க்ராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார்.
இதன் பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பாலாஜி, தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரவுடி தான், புகழ், வாயை மூடி பேசவும், காற்று வெளியிடை, வேலைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.
மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம், வெள்ளம் போன்ற பிரச்சனைகளின் போது மக்கள் சார்பில் ஆதாரவு குரல் கொடுத்து தோள் கொடுத்து நின்றவர். இவரது பேச்சு மக்களால் மிகுதியாக ரசிக்கப்பட்டு வருகிறது.
இதனால், காலேஜ், மீட்டிங் போன்ற இடங்களில் சிறப்பு பேச்சாளராக இவரை வரவழைத்து வருகின்ற்னர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன், கல்லூரி நிகழ்ச்சிகளில் இவர் பேசிய பேச்சு செம வைரல் ஆகி வருகிறது.
கல்லூரிகளில் ஆண் - பெண் பேசக்கூடாது என விதிமுறைகள் போடுவதனால், மாணவர்கள் வேலைக்கு வரும் போது இதன் மூலம் பெரும் சிக்கலை சந்திக்கின்றனர்.
ரஜினியின் ஒரு சில படங்களில் வெளிநாடு சென்று வருபவரை வில்லியாகவும், வீட்டில் இருப்பவரை ஹீரோயினாகவும் காட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.
என்ன தான் ரஜினி ரசிகனாக இருந்தாலும், இதனை ஆதரிக்க மாட்டேன் என அவர் கூறவே, ரஜினி படங்களை இந்த வகையில் விமர்சித்து பேசுவதா என சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
அதற்கு பதிலளித்துள்ள பாலாஜி, நான் எவ்வளவோ நல்ல விஷயங்களை பேசினேன்.
ஆனால், இதுதான் உங்களுக்கு தலைப்பாக தென்பட்டதா என பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளாக மாறியது.
தற்போது, ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் இடம்பெற்றுள்ள சில சீன்கள் பற்றி ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
அதில், ஆர்ஜே எல்கேஜி படத்தில் பிரியா ஆனந்த் கதாபாத்திரம் மட்டும் எப்படி சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. திமிரு காட்டாதடி என்கிற பாடலை ஏன் வைத்தீர்கள் என கேள்விகளை எழுப்பி ரஜினி ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
உனக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என வித விதமாக ட்ரோல் செய்து துவம்சம் செய்து வருகின்றனர்.
மேலும், ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் 3 தங்கைகளை வளர்க்க கஷ்டப்படும் அண்ணனாக காட்டியது மட்டுமின்றி, 3வது பெண்ணுக்கு வேண்டாமிருதம் என்றே பெயர் சூட்டியிருப்பார்.
மேலும், மூத்த தங்கச்சி வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பார்ப்பவரை அப்பாவியாகவும், இளைய தங்கச்சி படித்து விட்டு ஏர்ஹோஸ்ட்டஸ் வேலைக்கு செல்பவரை திமிர் பிடித்தவராகவும் ஏன் காட்டினீர்கள் ஆர்ஜே பாலாஜி என ரஜினி ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வள்ளி என்ற டைட்டிலில் படம் தயாரித்தது ரஜினி தான். சந்திரமுகி படத்திலும் கொஞ்ச சீன்களில் அவர் படத்திலே இருக்க மாட்டார்.
அப்படி மற்ற நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்த ரஜினிகாந்தின் படங்களை பற்றி பேசுவதற்கு முன்பாக சற்று யோசனை செய்யுங்கள் பாலாஜி என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.