யார் இந்த ஜெஸ்ஸி ? சிவகாமியிடம் சிக்கப்போகும் சந்தியா.. ராஜா ராணி 2வில் செம ட்விஸ்ட் !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், ராஜா ராணி 2 தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 தொடர்ந்து, ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள் குறித்த கதை ஆகும்.
சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா, 2வது பிரசவத்திற்காக சீரியல் இருந்து விடுபெற்றார். அதன் பின்னர், ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா அந்தகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் இந்த வாரம் இனி நடக்கவிருக்கும் ட்விஸ்ட் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. ஒரு வழியாக, பார்வதியை மீட்டு, குடும்பம் திரும்பவும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறது.
தனது கோச்சிங் கிளாஸ் முடித்துவிட்டு சரவணனுடன் சந்தியா வீட்டுக்கு வரும் போது புதிதாக ஜெஸ்ஸின்னு ஒரு பொண்ணு கிளாஸ்ல சேர்ந்து இருக்கா. ரொம்பப் பணக்கார பொண்ணு சும்மா டைம் பாஸ்க்கு இங்க வந்து சேர்ந்து இருக்கா என கூறுகிறார்.
அந்த நேரத்தில் பூக்காரர் ஒருவர் வழிமறித்து சந்தியாவுக்கு பூ வாங்கிக் கொடுக்கச் சொல்லி கூறுகிறார். சரவணன் பூ வாங்கி சந்தியா தலையில் வைத்துவிடுகிறார். வீட்டில் சரவணன் அப்பா சிவகாமியிடம் திடீரென எதுக்கு இவங்கள குற்றாலத்துக்கு போக சொன்ன என கேட்க சந்தியாவிற்கு குழந்தை பிறக்கணும். சந்தோஷமா இருந்திட்டு வரட்டும் என்று தான் சொன்னேன் என கூறுகிறார். இன்னொரு நாள் தனியா அனுப்பலாம் என திட்டம் போடுகிறார்.
இந்நிலையில், சந்தியா கிளாஸில் புதிதாக சேர்ந்த ஜெஸ்ஸி ஆதியின் காதலி. ஆதி ஜெஸ்ஸிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி விட்டு பரிசு கொடுக்கிறார். இதன்மூலம், இருவரும் காதலர்கள் என்பது தெரியவருகிறது. இனி, ஆதிக்கு சந்தியா கோச்சிங் செல்வது தெரிய வருமா ? ஜெஸ்ஸி ஆதியின் காதலி என சந்தியா தெரிந்து கொள்வாரா ? என்ன நடக்க போகுதுனு பொறுத்திருந்து பாப்போம்.