ஷூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி விழுந்த ரக்சிதா.. இணையத்தில் வெளியாகி வைரலாகும் வீடியோ..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரக்சிதா மஹாலக்ஷ்மி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய அனைத்து மொழி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் மொழியில், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என அனைத்து பிரபல சேனல்களிலும் நடித்துள்ளார். பிரிவோம் சந்திப்போம், இளவரசி, சரவணன் மீனாட்சி 2 & 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
தன்னுடன் சீரியல் தொடரில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஒரு ஆண்டாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்பத்தினரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரக்சிதா தற்போது ‘சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்து வருகிறர். இந்த தொடரில் கணவனை இழந்து, இரு குழந்தைகளை வளர்க்க போராடும் தாய் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நாயகனாக விஜய் டிவி ஆபீஸ் சீரியல் விஷ்ணு நடிக்கிறார்.
இந்நிலையில், இந்த தொடரின் ஷூட்டிங் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், மழையில் நடந்து செல்லும் ரக்சிதா வழுக்கி விழுவது போன்ற வீடியோ.
முழு வீடியோ பார்த்த பின்பு தான் அது ஷூட்டிங்காக எடுத்தது என தெரிகிறது. ஆனால், நிஜமாக விழுந்தது போலவே பார்க்க இருக்கவே ரசிகர்கள் ஷாக் ஆகி வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
ஒரு பக்கம் அவர் நிஜமாகவே வழுக்கி விழுந்ததை அப்படியே ஷூட்டிங் செய்து சமாளித்து இருக்கிறது சீரியல் குழு என கூறி வருகின்றனர். இந்த காட்சி சீரியலில் வருமா இல்லயா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.