காதல் தோல்வியா ? பிரியா பவானி சங்கரின் உருக்கமான பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள் !
தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர்கள் என அனைவரும் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து புகழடைந்து வருகின்றனர். அந்த வகையில், புதிய தலைமுறை முதல் பல பிரபல செய்து சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.
இதனைத் தொடர்ந்து, இவரது புகைப்படங்கள் பெரிதும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வந்தது. செய்தி வாசிப்புக்காகவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர், திரையுலகில் வைபவ் ஜோடியாக மேயாத மான் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
இப்படத்திற்கு பல விருதுகள் பெற்ற இவர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மணப்பெண்ணே போன்ற திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது மட்டுமின்றி, டைம் என்ன பாஸ் என்னும் வெப் சீரீஸ் தொடரில் நடித்துள்ளார்.
தற்போது, திருச்சிற்றம்பலம், அகிலன், குருதி ஆட்டம், ஹாஸ்டல், பொம்மை போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, மேலும் சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
படங்களில் பிஸியாக இருந்தாலும் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது, அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பதிவில் தனது பழைய ஞாபகங்கள் குறித்தான காட்சிகளை தனது மொபைலில் கண்ட பிறகு மனம் உடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த முழு பதிவை பார்த்துவிட்டு, ரசிகர்கள் பிரியா பவானி சங்கருக்கு காதல் தோல்வி ஏற்பட்டு விட்டதா? என்கிற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.