நித்யானந்தா - பிரியா ஆனந்த் திருமணம் ? நடிகையின் பேட்டியால் பரபரப்பு.. வைரல் வீடியோ !
திரையுலகில் அதிக ஈடுபாடு கொண்ட பிரியா ஆனந்த், தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன், மாடலிங் செய்யத் தொடங்கினார். அதன் பின்னர் சில விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது.
தமிழில் ஜெய் ஜோடியாக வாமனன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தமிழில், புகைப்படம், 180, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகுந்த வரவேற்பை தமிழ் மக்களிடையே ஏற்படுத்தி தந்தது. அதன் பின்னர், ஒரு ஊருல 2 ராஜா, திரிஷா இல்லனா நயன்தாரா, அரிமா நம்பி, கூட்டத்தில் ஒருத்தன், LKG போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாது சில வெப் சீரீஸ்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது, தமிழ் மொழியில், சுமோ, அந்தகன், காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதன் நடுவே, தனது தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது நித்தியானந்தாவை திருமணம் செய்துகொள்வேன் என மிகவும் ஜாலியாக கொடுத்துள்ள பேட்டி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பேட்டியில் ‘நித்தியானந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நித்தியானந்தாவை திருமணம் செய்தால் பிரியா ஆனந்த் என்ற தன்னுடைய பெயரைக்கூட மாற்ற வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவருக்கு அனைவரையும் சுலபமாக ஈர்க்க தெரியும் என்றும், நித்தியானந்தாவை இத்தனை பேர் பின் தொடருகிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தானே அர்த்தம்’’ என்று தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.