பிரதாப் போத்தன் கடைசியாக பேஸ்புக்கில் பகிர்ந்த பதிவு ! இறப்பதற்கு முன்பே மரணம் குறித்து.. ச்ச என்ன எதார்த்தம்..
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் பிரதாப் போத்தன். உடல் நலக்குறைவால் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனது வீட்டில் பிரதாப் போத்தன் இன்று காலமானார். இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ரசிகர்கள் மற்றும் திரையுல பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கிய பிரதாப் போத்தனுக்கு வயது 69. 1978ம் ஆண்டு ஆரவம் என்னும் மலையாள படம் மூலம் திரையுலகில் நடிகராக தனது பயணத்தை தொடங்கினார். தமிழில் பாலு மகேந்திரா இயக்கத்தில் 1979ம் ஆண்டு வெளிவந்த அழியாத கோலங்கள் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
இதையடுத்து எராளமான படங்களில் நடித்து வந்த பிரதாப் போத்தன் 1985ம் ஆண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார். மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார். ஜீவா, வெற்றி விழா, லக்கி மேன், சீவலப்பேரி பாண்டி போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
படிக்காதவன், பூஜை, ரெமோ, துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இன்று, உடல் நலக்குறைவால் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனது வீட்டில் பிரதாப் போத்தன் காலமானார். இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ரசிகர்கள் மற்றும் திரையுல பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே பிரதாப் போத்தன் கடைசியாக தனது பேஸ்புக் பக்கத்தில் Jim Morrison என்ற ஒரு அமெரிக்க பாடகர் சொன்னத்தை விஷயத்தை பதிவிட்டுள்ளார். தற்போது பிரதாப் போத்தனின் அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.