குக் வித் கோமாளியில் பிரபல நடிகர்.. சந்தோஷம் கலந்த ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள்.. வெளியான ப்ரோமோ !
சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.
2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி.
இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட்.
முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
மூன்றாவது சீசனில் வித்யுல்லேகா ராமன்,ரோஷ்னி ஹரிப்ரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.
அடுத்தடுத்து எலிமினேஷன், காமெடி என கலவையாக இருந்து வரும் இந்நிகழ்ச்சியில், நடுவர் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் பேசிய வீடியோ தற்போது செம பேச்சு பொருளாக மாறி உள்ளது. இந்த நிகழ்ச்சி ஊரடங்கு சமயத்தில் நிறைய பேருக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக அமைந்தது என்பது உண்மை.
இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே நடந்துள்ளது. இதில் முத்துக்குமார், ஸ்ருதிகா, தர்ஷன், வித்யூலேகா, அம்மு அபிராமி என ஐந்து நபர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது இரவின் நிழல் படத்தின் ப்ரோமோஷனுக்காக வந்துள்ளார்.
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் ரெகார்ட் பிரேக் செய்யும் அளவிற்கு சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் மேடையில் உரையாடிக்கொண்டிருந்த இயக்குனர் பார்த்திபன், மைக்கை கீழே போட்டது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தது.
அதன் பிறகு, தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கோரி பார்த்திபன் வீடியோ பதிவிட்டதும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டது. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பார்த்த ரசிகர்கள், இப்படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என பாராட்டி வருகின்றனர். லிப்லாக் காட்சி, சாமியாராக வரலட்சுமி, கை குழந்தையுடன் பார்த்திபன் என கணிக்க முடியாத அளவிற்கு வித்தியாசமாக காட்சிகள் உள்ளன.
இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பார்த்திபன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.