Viral Video: பொன்னியின் செல்வன் நாவலில் இப்படி ஒரு சீனே இல்லையே.. ஒரே வீடியோவால் குழம்பிய ரசிகர்கள் !
புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது. இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, இவர்கள் குறித்த வீடியோ, glimpse என வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
இப்படத்தின் ரிலீஸ் வருகிற 30ம் தேதி நடக்கவிருப்பதால் நடிகர் - நடிகைகள் ப்ரோமோஷன் பணிகளுக்காக பல பேட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் செட் மேக்கிங் வீடியோ, Glimpse வீடியோ, ஷூட்டிங் போட்டோஸ் என வைரலாகி வருகிறது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில், நாவலின் கதைப்படி ஆதித்த கரிகாலன், அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன் ஆகிய மூவரும் ஒன்றாக சந்தித்துக் கொள்ளும்படியான காட்சியே இருக்காது.
ஆனால் பொன்னியின் செல்வன் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள புரோமோவில் ஆதித்த கரிகாலன் விக்ரம், அருண்மொழி வர்மன் ஜெயம் ரவி, வந்தியத்தேவன் கார்த்தி ஆகிய மூவரும் ஒன்றாக குதிரையில் வரும்படியான காட்சி இடம்பெற்றுள்ளதைப் பார்த்து பலரும் குழம்பிப்போய் உள்ளனர். இது மணிரத்னம் வைத்த டுவிஸ்டாக இருக்கலாம் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ இது படத்தின் புரமோஷனுக்காக எடுக்கப்பட்ட காட்சி என்று கூறுகின்றனர். படம் ரிலீசானால் தான் இவற்றுள் எது உண்மை என்பது தெரியவரும்.