'மார்பக வரி கேட்டதால் மார்பை அறுத்தெறிந்த சிங்கப்பெணின் உண்மை கதை' பேசுபொருளான மலையாளப்படம்

pathombatham noottandu movie became talk of the industry due to its story plot

சுமார் 150 வருடத்திற்கு முன்பு இந்தியாவில் பல்வேறு இடங்களில் சாதிக்கொடுமை உச்சம் பெற்று இருந்தது. ஆதிக்க செய்பவர்களின் வர்கத்தின் அதிகாரங்களுக்கும் அடக்குமுறைக்கும் எதிராக குரல் கொடுத்தவர்கள் நூதனமுறையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட கொடூர சம்பவங்களும் அரங்கேறி வந்தன. அந்த சமயத்தில் கேரள மாநிலத்தில் பல கொடுமையான சட்டங்களும், தண்டனைகளும் அமலில் இருந்தது.

pathombatham noottandu movie became talk of the industry due to its story plot

இதில் திருவாங்கூர் சமஸ்தானம் கொண்டுவந்த ஒரு கொடூர சட்டம் தான் மார்பக வரி சட்டம். உயர்குடி பெண்களைத் தவிர மற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் அனைவரும் தங்கள் மார்பகத்தின் அளவிற்கு ஏற்ப அதனை மறைக்க வரி செலுத்த வேண்டும். மார்பை மறைக்க வேண்டாம் என்றால் வரி செலுத்த வேண்டாம் என்பதே அந்த கொடூர சட்டத்தின் பின்னணி.

pathombatham noottandu movie became talk of the industry due to its story plot

இந்த மார்பக வரி சட்டத்தை எதிர்த்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நங்கேலி, ஒரு நடுத்தர வயது பெண், தனி ஆளாக குரல் கொடுத்து வந்தார். நங்கேலியின் எதிர்ப்பால் கோபப்பட்ட அரசு, அவளின் குரலை ஒடுக்க, அவள் மட்டும் இரட்டை வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத நங்கேலி, தான் வரி செலுத்த முடியாது என்கிற முடிவில் தீர்மானமாக இருந்தாள்.

pathombatham noottandu movie became talk of the industry due to its story plot

ஒருநாள் வீடுவரை வந்த அதிகாரிகள் நங்கேலியிடம் வரி கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களை கோபத்துடன் எதிர்த்து பேசிய நங்கேலியை அதிகாரிகள் அடித்து துன்புறுத்தி மானபங்கப்படுத்தினர். அவமானம் தாங்க முடியாத நங்கேலி, தன்னிடம் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து, மார்பகம் இருந்தா தான வரி கேட்பாய், நீயே எடுத்துச் செல் எனக் கூறி அதிகாரிகள் முன் தான் அணிந்திருந்த மேலாடையை அவிழ்த்து, தனது மார்பகங்களை அறுத்து தன் முன்னே இருந்த வாழை இலையில் வைத்தால், இதைக்கண்டு அனைவரும் உறைந்து போயினர்.

pathombatham noottandu movie became talk of the industry due to its story plot

வலியால் துடிதுடித்த நங்கேலி, ரத்த வெள்ளத்தில், அங்கேயே சரிந்து விழுந்து மரணம் அடைந்தார். மார்பக வரிக்கு எதிராக தனி ஆளாக குரல் கொடுத்து தன் உயிரை தியாகம் செய்த நங்கேலியின் இந்த வீர மரணத்தை பார்த்து ஆடிப்போன அரசாங்கம் உடனடியாக இந்த சட்டத்தை நீக்க உத்தரவிட்டது. வரலாற்றில் நடந்துள்ள இத்தகைய கொடூரமான சம்பவத்தை தற்போது தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ள படம் தான் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’. மலையாள திரையுலகில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நங்கேலி கதாபாத்திரத்தில் நடிகை கயாடு லோகர் நடித்திருக்கிறார்.

pathombatham noottandu movie became talk of the industry due to its story plot

இதில் வேலாயுத பணிக்கர் என்ற போராளி கதாபாத்திரத்தில் நடிகர் சிஜு வில்சன் நடித்து இருக்கிறார். வினயன் இப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் ரிலீசான பின்னர் தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இப்படத்தில் நங்கேலியாக நடித்துள்ள கயாடு லோகர் மார்பகத்தை அறுத்து எறியும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருள் ஆகி உள்ளது. தற்போது கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவிலா இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது என்பது நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Share this post