கல்யாணம் முடிந்த கையோடு.. நிக்கி கல்ராணி எடுத்த முடிவு ! ஏன் இப்டி ?
மிருகம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. இதனைத் தொடர்ந்து ஈரம், அரவான் போன்ற பல பிரபலமான திரைப்படங்களில் நடித்து வந்தார். சுமாரான அளவிற்கு படங்கள் இருந்தாலும் இவருக்கென தனி வரவேற்பு மக்கள் மத்தியில் தற்போதும் இருந்து வருகிறது.
நிக்கி கல்ராணி, ஜீ.வி பிரகாஷ் நாயகனாக நடித்த படமான டார்லிங் மூலம் அறிமுகமானார். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 மற்றும் கலகலப்பு 2 போன்ற படங்களின் மூலம் நல்ல பிரபலம் ஆனார்.
இந்த நிலையில், மரகத நாணயம் படத்தில் உடன் நடித்த போது நிக்கி கல்ராணி உடன் காதல் ஆனதால், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என தகவல் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.
இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், இந்த நிலையில், வியாழன் (மார்ச் 24) அன்று நடிகை நிக்கிக்கும் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கூறப்பட்டது. சென்னையில் உள்ள நிக்கி கல்ராணி வீட்டில் நெருங்கிய திரையுலக நண்பர்கள் கலந்து கொள்ள சிம்பிளாக நிச்சயதார்த்தம் செய்தனர்.
கடந்த மே 18ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து மழையை பொலிந்து வந்தனர்.
இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா, ஜீவா, சசிகுமார், நாசர், அருண்விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், தாணு, இயக்குனர் ஹரி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், திருமணமான வெகு சில நாட்களில் நடிகை நிக்கி கல்ராணி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ள ‘வெல்லும் திறமை’ என்கிற ரியாலிட்டி ஷோவில் நடுவராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அவர் சினிமா விட்டு விலகி, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது