'இத கூட செய்யல.. சூர்யாவுக்கு எதுக்கு தேசிய விருது ?'.. வீடியோ ஆதாரத்துடன் சூர்யாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்
இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து எடுத்துள்ள படம் ராக்கெட்ரி. நம்பி நாராயணனாக நடிகர் மாதவன், மாதவனுக்கு சிம்ரன் ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
கான்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ராக்கெட்டரி திரைப்படத்தை இந்திய அரசு சார்பில் World Premiere ஆக ரிலீஸ் செய்தனர். கமர்ஷியல் சமரசங்கள் இல்லாமல், ஒரு ப்யூர் பயோபிக்கை கொடுத்தே ரசிகர்களை கவர்ந்திழுக்க முடியும் என்பதை சாதித்து காட்டி இருக்கிறனர் படக்குழு.
இப்படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனாகவே வாழ்ந்து இருப்பதாக பலரும் பாராட்டினர். அதுமட்டுமின்றி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ரன், ஜெகன் முதல் கேமியோ ரோலில் நடித்த சூர்யா, ஷாருக்கான் வரை அனைவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சமீபத்தில் வெளியாகி மக்கள் மனதை பெரிதும் பாதித்ததாக அமைந்த திரைப்படம் ராக்கெட்ரி. நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை பற்றி படமாக்கப்பட்ட அத்திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ரஜினி கூட அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என பாராட்டி இருந்தார்.
இந்நிலையில், ராக்கெட்ரி படத்தில் சூர்யா நடித்த சீனை வைத்து கடுமையான விமர்சனங்கள் இணையத்தில் உலாவ தொடங்கி உள்ளது. நம்பி நாராயணன், சட்ட ரீதியாக போராடி, தனது மீது சுமத்தப்பட்ட தேச துரோகி என்னும் பட்டம் முதல் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என நிரூபித்தார். அப்படிப்பட்ட தேச பக்தி மிக்க ஒரு நிகழ்கால மனிதரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை வைத்து, எடுக்கப்பட்ட படம், ராக்கெட்ரி.
படத்தில், நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் வரும் மாதவன், பேட்டி தரும் காட்சி முடிந்ததும், நம்பி நாராயணன், ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறி முடிப்பார். இந்தி மொழியில் பேட்டி எடுத்த நடிகர் ஷாருக்கானும் பதிலுக்கு, ‘ஜெய் ஹிந்த்’ என கூறுவார். தமிழ் மொழியில், நடிகர் சூர்யா பேட்டி எடுப்பார். ஆனால், அவர் ‘ஜெய் ஹிந்த்’ என கூறியதாக காட்டப்படவில்லை.
இது குறித்து பல விமர்சனங்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் பேசி இருந்தார். சூர்யா மீது காயத்ரி வைத்த விமர்சனம் நெட்டிசன்கள் மத்தியிலும் பரவத் துவங்கி இருக்கிறது.
சமீபத்தில், சூர்யாவிற்கு சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகர் சூரரை தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதற்கு சூர்யாவும் நன்றி தெரிவித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இப்படி ஒரு நிலையில், ‘ராக்கெட்ரி’ படத்தில் சூர்யா ஜெய் ஹிந்த் சொல்லாததை குறிப்பிட்டு நெட்டிசன்கள் சிலர் ‘ஜெய் ஹிந்த் சொல்லாத சூர்யாவிற்கு எதற்கு தேசிய விருது ?’ என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.
Sir, Don't understand what's the hesitation to say "Jai Hind" by
— Vignesh Kumar (@VigneshKumar_04) July 31, 2022
Suriya when SRK says in Hindi version of movie at climax. The so called National Award Winner @Suriya_offl
wants award from nation without nationalistic thoughts...
Hmm.. If it's so difficult to utter the word "Jai Hind" I think it would have been better if @ActorMadhavan had casted someone else. Actor #arjunsarja would have done better justice to the role@sansbarrier @karthikgnath #RocketryTheNambiEffect #Rocketry #Suriya #JaiHind pic.twitter.com/rfAsX9rWAN
— Average_Indian (@Naveen_M07) August 1, 2022