பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் இருந்து விலகுகிறாரா ? நடிகை பதிவிட்ட இன்ஸ்டா பதிவு !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாக்கியலட்சுமி தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று.
சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.
கோபி கதாபாத்திரம் குறித்து அதிக மீம்ஸ் பதிவிட்டு வரும் ரசிகர்கள், இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை.
இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். இவர் இப்போது விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகும் புதிய தொடரான செல்லம்மா சீரியலிலும் நடிக்கிறார். பாக்கியலட்சுமி மற்றும் செல்லம்மா தொடர் ஷூட்டிங் மாறி மாறி சென்று வருகிறார்.
இனியாவாக நடிக்கும் நேஹா தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில் திவ்யா கணேஷை டேக் செய்து ‘வி மிஸ் யூ அக்கா’ என பதிவு செய்துள்ளார்.
வி மிஸ் யூ என அந்த வீடியோவில் இடம்பெற்ற புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னது திவ்யா கணேஷ் வெளியேறுகிறாரா என அதிர்ச்சியாகினர். ஆனால், உண்மை யாதெனில், வேறு படப்பிடிப்பிற்கு திவ்யா செல்வதாலும், நேஹாக்கு அடுத்து 3 நாள் ஷூட்டிங் இல்லாததால் மிஸ் யூ என கூறியுள்ளதாக நேஹா பதிவு செய்திருக்கிறார்.