நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதி ? என்ன காரணம் ? தற்போது நிலை என்ன ? முழு விவரம்

Nayanthara got admitted in hospital for food poison

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

Nayanthara got admitted in hospital for food poison

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

Nayanthara got admitted in hospital for food poison

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

Nayanthara got admitted in hospital for food poison

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், நயன்தாரா சொந்த ஊரான கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

Nayanthara got admitted in hospital for food poison

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியது.

Nayanthara got admitted in hospital for food poison

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் இவர்களின் திருமண வீடியோ வெகு விரைவில் வெளியாகவுள்ளது குறித்து netflix டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், நடிகை நயன்தாரா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சில மணி நேரங்களில், நயன்தாரா நலமாகிவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தி குறித்து, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து எவ்வித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. உணவு ஒவ்வாமை காரணமாக நயன்தாரா வாந்தி எடுத்ததாகவும், இதனால் அவரது கணவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தகாக கூறப்படுகிறது.

Share this post