நாங்க இன்னும் விவாகரத்து செய்யல.. 2வது திருமணம் குறித்து நாக சைதன்யா சொன்னது இது தான் !

Naga chaitanya opens up about his 2nd marriage news spreading in social media

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

Naga chaitanya opens up about his 2nd marriage news spreading in social media

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

Naga chaitanya opens up about his 2nd marriage news spreading in social media

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Naga chaitanya opens up about his 2nd marriage news spreading in social media

நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியானது. மேலும், அந்த பெண் நடிப்புத்துறையில் கட்டாயம் இருக்கக்கூடாது என அவர் கண்டிஷன் போட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

Naga chaitanya opens up about his 2nd marriage news spreading in social media

தற்போது, இதனை நிராகரிக்கும் வகையில் நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார். அதாவது, சமந்தாவுக்கும், இவருக்கும் இன்னும் விவாகரத்து நடக்கவில்லை, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக கூறினார்.

Naga chaitanya opens up about his 2nd marriage news spreading in social media

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வது குற்றம். அதனால் சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி வதந்தி என கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Share this post