'சமந்தாவை பார்த்தால் ஹாய் சொல்லி கட்டிப்பிடிப்பேன்' சமந்தவுக்கு நச் பதில் கொடுத்த நாக சைதன்யா !

Naga chaitanya answers for samantha answer in an interview

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

Naga chaitanya answers for samantha answer in an interview

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

Naga chaitanya answers for samantha answer in an interview

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Naga chaitanya answers for samantha answer in an interview

நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை நிராகரிக்கும் வகையில் நாக சைதன்யா விளக்கம் அளித்திருந்தார். அதாவது, சமந்தாவுக்கும், இவருக்கும் இன்னும் விவாகரத்து நடக்கவில்லை, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Naga chaitanya answers for samantha answer in an interview

எத்தனை நடந்தாலும், சமந்தா - நாக சைதன்யா அவர்களின் விவாகரத்து குறித்த காரணம் இன்னும் வெளியாகவில்லை. சமீபத்திய நிகழ்ச்சியில் வெளிப்படையாக அவர் கூறிய ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியின் போது சமந்தாவிடம் விவகாரத்திற்கு பிறகு, உங்கள் உறவு எப்படி இருக்கிறது என கேட்ட கேள்விக்கு பதில் அளித்த இவர் தன்னையும் அவரையும் ஒரே ரூமில் அடைத்தால் கூர்மையான ஆயுதங்களை அங்கே மறைத்து வைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

Naga chaitanya answers for samantha answer in an interview

இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் நாகசைதன்யாவிடம், காபி வித் கரண் நிகழ்ச்சியில், சமந்தா கூறியது குறித்தான கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த நாக சைதன்யா, சமந்தாவை கண்டால் ஹாய் சொல்லி கட்டி அணைப்பேன் எனக் கூறியுள்ளார். அதோடு இப்போது எல்லாம் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரங்களை செலவழிக்கிறேன். முன்னதாக என்னால் நிறைய மனம் திறந்து பேச இயலாது. இப்போது நான் ஒரு புதிய மனிதனாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Share this post